search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேசன் கடை பணியாளர்கள்"

    • பல்வேறு கடைகளில் ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் பங்கேற்றனர்
    • 30 சதவீதம் அகவிலைப்படி வழங்க வேண்டும், பொது விநியோகத்திற்கான தனித் துறை அமைக்க வேண்டும் என கோரிக்கை

    கடலூர்:

    தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் சார்பில் ஊழியர்களுக்கு 30 சதவீதம் அகவிலைப்படி வழங்க வேண்டும். பொது விநியோகத்திற்கான தனித் துறை அமைக்க வேண்டும். தரமற்ற பொருட்களுக்காக நியாய விலை கடை பணியாளர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்வதை கைவிட வேண்டும்.

    அத்தியாவசிய பொருட்கள் அதிகமாக இருந்தால் பல மடங்கு அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 3நாள் தொடர் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டன.

    அதன்படி கடந்த 7ஆம் தேதி முதல் தொடங்கியதையொட்டி இன்று 3-வது நாளாக 9-ஆம் தேதி வேலைநிறுத்த போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பணி புரிந்து வந்த ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு கடலூர் பழைய கலெக்டர் முன்பு திரண்டனர். பின்னர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கு மாவட்ட துணைத் தலைவர் முத்து பாபு தலைமை தாங்கினார் நிர்வாகிகள் கந்தன் தேவராஜ் ராமானுஜம் குமரன் பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர் ராஜாமணி கண்டன உரையாற்றினார் இதில் நிர்வாகிகள் ஸ்ரீதர் ராமதாஸ் கணேசன் குமரன் செல்வம் மனோகர் சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    மேலும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு கடைகளில் ஊழியர்கள் பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் கடைகள் மூடப்பட்டு இருந்தது காணமுடிந்தது. முடிவில் மாவட்ட பொருளாளர் அருள் நன்றி கூறினார்.

    ×